முல்லைப்பெரியாறு – உண்மை நிலை
தமிழக-கேரள எல்லை பகுதியில் தீப்பற்றி எறிந்து கொண்டிருக்கும் முல்லைப்பெரியாறு அணை யாருக்கு தான் சொந்தம்..? கேரள எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அணைக்கு தமிழகம் உரிமை கோருவது நியாயம் தானா..? தமிழர்கள் பலருக்கே எழுந்துள்ள இதுபோன்ற கேள்விகளுக்கும் முல்லைப்பெரியாறு பிரச்சனை குறித்தும் அதன் வரலாறு குறித்தம், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் தயாரித்து வெளியிட்டுள்ள “முல்லைப்பெரியாறு பிரச்சனையும் தீர்வும்” என்ற ஒர் ஆவணப்படம் தெளிவாக விளக்குகிறது. அவர்களுக்கு எம்நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
ஆவணப்படத்தை காண இங்கே சொடுக்கவும்
இயலுமெனில், சக தோழர்களுக்கும் அனுப்பி தமிழ் நாட்டின் நிலையை உணர்த்துவீர்
Friday, December 9, 2011
Tuesday, May 25, 2010
கடவுள் ஏன் கல்லானான்

கண் மூடி தியானிக்கையில்
கடவுள் வந்தமர்ந்தார் என் மனதில்
என்னுள் எழுந்த கேள்விக்கு
உவப்புடனே பதில் தந்தார்
இனிய தமிழில்
மண்மீது தான் படைத்த உயிர்களிலே
மனிதன் மட்டும் பாதை மாறி போனதாலே
கண்கொண்டு பார்க்க சகிக்காமல்
கல்லாகி போனதாக கடவுள் சொன்னார்
சாதிமத பேதத்தின் அடிப்படையில்
சமமற்ற சமுதாய செயல்கள் கண்டு
கல்லாய் சமைந்ததாய் சாமி சொன்னார்
காவிதறித்த சில கயவர்களின்
கருங்காலித்தனம் கண்டு
கற்சிலையாய் போனதாக சங்கடப்பட்டார்
தான் அருளிச்செய்த தீந்தமிழில்
அர்ச்சனை செய்யாத அறிவிலிக்கு
அருள்பாலிக்க மனமின்றி
கல்லாய்ப் போனதாக ஆதங்கப்பட்டார்
மனித வாழ்வின் ஆதாரமாய்
தான் அமைத்திட்ட இயற்கை வளத்தினை
மனிதன் அழித்தொழிக்க முற்படும்
அவலநிலையினை
தனக்கு தானே தோண்டிக்கொள்ளும்
சவக்குழியினை
காணும் சக்கியற்று
கல்லாகி போனதாக
கதைத்து விடைப்பெற்றார் கடவுள்;
அன்பையும் அமைதியையும் நோக்கி
மனித மனங்களை ஆற்றுப்படுத்துவோம்
கறையற்ற மானுட சமூகம் கண்டு
கல்லிருந்து கடவுளை மீட்டெடுப்போம்..
Thursday, April 8, 2010
Wednesday, February 24, 2010
இன்றேனும் சொல்லிவிடு
உன் பார்வையில் பதுங்கியிருக்கும்
ஆயிரம் பொருள்களுக்குள்
அல்லாடுகிறேன் நான் !
உன் சிரிப்பில் சிக்கி
சிதரிவிடாமலிருக்க
சிரமப்படுகிறேன் நான் !
உன் வனப்பில்
மயங்கி விழுந்து
மூர்ச்சையாகிறேன் நான் !
போதுமடி அவஸ்தை
இன்றேனும் சொல்லிவிடு
என்னை
என்ன செய்வதாய் உத்தேசம் !!!
போ என சொல்
செத்துப்போகிறேன்
பொறு என சொல்
யுகயுகமாய் காத்திருக்கிறேன்
மற என மட்டும் சொல்லாதே
நடமாடும் பிணமாய் இருப்பதில்
நாட்டமில்லை எனக்கு !!!
ஆயிரம் பொருள்களுக்குள்
அல்லாடுகிறேன் நான் !
உன் சிரிப்பில் சிக்கி
சிதரிவிடாமலிருக்க
சிரமப்படுகிறேன் நான் !
உன் வனப்பில்
மயங்கி விழுந்து
மூர்ச்சையாகிறேன் நான் !
போதுமடி அவஸ்தை
இன்றேனும் சொல்லிவிடு
என்னை
என்ன செய்வதாய் உத்தேசம் !!!
போ என சொல்
செத்துப்போகிறேன்
பொறு என சொல்
யுகயுகமாய் காத்திருக்கிறேன்
மற என மட்டும் சொல்லாதே
நடமாடும் பிணமாய் இருப்பதில்
நாட்டமில்லை எனக்கு !!!
Monday, February 15, 2010
Subscribe to:
Posts (Atom)

